வேலைத்தளத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!
வேலைத்தளத்தில் நேற்றையதினம் (08.12.2022) பணியாற்றி கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மூன்றாவது மாடியிலிருந்து நபர் ஒருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு அவர் வவுனியாவை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. வவுனியா குட்செட் வீதியினை வதிவிடமாக கொண்ட 41வயதுடைய கனகசபை ரஜித் நிலோசன் என்ற நபர் கொழும்பில் தங்கியிருந்து மின்னினைப்பு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed